sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு

/

ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு

ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு

ஆய்வக தொழில்நுட்ப பயிற்சியில் சேர அழைப்பு


ADDED : செப் 15, 2025 12:51 AM

Google News

ADDED : செப் 15, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில், 30 ஆய்வக தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிற்சி துவங்கப்பட உள்ளது.

இதில் சேர, மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகள், மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ - மாணவியருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டி.எம்.எல்.டி., என்ற ஆய்வக தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர, பிளஸ் 2ல் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொற்று நோய் மருத்துவமனை அலுவலகத்தில், இன்று முதல் 22ம் தேதி வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து நாட்களிலும், விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us