நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர், விழுப்புரத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 25. சென்னை, திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வந்தார்.இவரது மனைவி சித்ரா, 23. சித்ராவின் தம்பி அண்ணாமலை, 22. இருவரும் மெக்கானிக் வேலை பார்த்தனர். நேற்று இருவரும் மது அருந்தினர். போதையில் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திமடைந்த அண்ணாமலை, காய்கறி வெட்டும் கத்தியால் ஏழுமலையின் மார்பில் குத்தினார். சம்பவ இடத்திலேயே ஏழுமலை இறந்தார். திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, அண்ணாமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

