/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷிவ் நாடார் பல்கலையின் தேசிய வினா - வினா போட்டி
/
ஷிவ் நாடார் பல்கலையின் தேசிய வினா - வினா போட்டி
ADDED : ஜன 14, 2024 12:39 AM

சென்னை,ஷிவ் நாடார் பல்லை சென்னை நடத்திய, தேசிய அளவிலான 'புராஜெக்ட் எக்ஸ்' வினாடி - வினா போட்டியில், சென்னை மற்றும் திருநெல்வேலி பள்ளிகள் முதலிடங்களை பிடித்து அசத்தின.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கல்வி விழாவை, ஷிவ் நாடார் பல்கலை சென்னை அதன் வளாகத்தில் நடத்தியது. இதில், 'க்யுபிஸ்' மற்றும் 'புராஜெக்ட் எக்ஸ்' என்ற திட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த முயற்சியானது, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாத்தியமான வாழ்க்கை பாதைகள் பற்றிய நுண்ணறிவுகளுடன் மாணவர்களை ஈடுபடுத்துதல், ஊக்கப்படுத்துதல் மற்றும் சித்தப்படுத்துதல் என்பதை நோக்கமாக கொண்டது.
இதில், புராஜெக்ட் எக்ஸ் போட்டியில், நெல்லை புஷ்பலதா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த எஸ்.நரேன் ராஜசேகர், எம்.செந்தில் குமார், எம்.விஷால் ஆகியோர் வெற்றி பெற்று, தலா 25,000 ரூபாய் பரிசை வென்றனர்.
அவர்களை தொடர்ந்து, ஜெய்ப்பூர் ஜெய்ஸ்ரீ பெரிவால் பள்ளியின் அக்ஷ்த் கர்க், பாஸ்கர் சிங் இரண்டாமிடத்தையும், கோவை மஞ்சள் ரயில் பள்ளியின் அத்வைத் கவுசிக் மற்றும் யுவன் மூன்றாம் இடங்களை வென்றனர்.
வினாடி - வினா போட்டி, சென்னை, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் நடந்தது. இதில், சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளியின் ஆர்.ஷியாம் சுந்தர், அர்ஜுன் வைத்தியநாதன், தலா 25,000 ரூபாய் வென்றனர். பி.எஸ்.பி.பி., மில்லினியம் கோவையை சேர்ந்த விஷ்ருத் முரளிதரன் மற்றும் அஷ்வின் ஆகியோர் இரண்டாமிடமும், வித்யா நிகேதன் கோவையைச் சேர்ந்த ககன் ஜி தும்கூர் மற்றும் அதுலிதன் மூன்றாம் இடங்களை வென்றனர்.

