/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய ரேங்கிங் டென்னிஸ் தமிழக ஜோடி முதலிடம்
/
தேசிய ரேங்கிங் டென்னிஸ் தமிழக ஜோடி முதலிடம்
ADDED : ஜன 20, 2024 11:59 PM

சென்னை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவில், எம்.எம்., டென்னிஸ் அகாடமி சார்பில், செல்லதுரை நினைவுக்கான அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டி, மேற்கு முகப்பேரில் உள்ள அகாடமி வளாகத்தில் நடக்கிறது.
இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 90க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். ஆண்களுக்கான இப்போட்டிகள், தனிநபர் மற்றும் இரட்டையருக்கு தனித்தனியாக நடக்கின்றன.
நேற்று நடந்த இரட்டையருக்கான இறுதி போட்டியில், தமிழக வீரர்களான அனிஷ் பரோலின் - தேஜா கிருஷ்ணா மற்றும் சித்தார்த் ஆர்யா, பூபதி சக்திவேல் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான போட்டியில், 7 - 6, 6 - 4 என்ற நேர்செட்டில், அனிஷ் பரோலின் - தேஜா கிருஷ்ணா ஜோடி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தியது.
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவர்களான இருவரும், சமீபத்தில் நடந்த அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான போட்டியில் கோப்பையை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனிநபர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன.

