sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி

/

ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி

ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி

ஓ.எம்.ஆர். -- இ.சி.ஆரில் மீட்கப்பட்ட இடங்களில் வேலி


ADDED : ஜன 24, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னை மாவட்டம், சோழிங்கநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட, ஓ.எம்.ஆர். காரப்பாக்கத்தில், அரசுக்கு சொந்தமான, 20 சென்ட் இடம், வருவாய்த் துறையால் மீட்கப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

அதேபோல், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6 சென்ட் இடம், பள்ளிக்கரணையில் மீட்கப்பட்டது. மேலும், இ.சி.ஆர். கொட்டிவாக்கத்தில் 85 சென்ட் அரசு தரிசு இடம் மீட்கப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

மீட்கப்பட்ட இடங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காமல் இருக்க, சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு இடத்திலும் அதன் வருவாய் புல எண்களை குறிப்பிட்டு, 'தமிழக அரசு வருவாய்த் துறைக்கு சொந்தமானது. அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us