நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு, அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் செங்கோடன், 71; இவர் பணம் மோசடி வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கல்லீரல் நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சைக்காக, கடந்த மாதம் 27ம் தேதி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

