/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கை மாவட்ட செஸ் 212 சிறுவர்கள் உற்சாகம்
/
செங்கை மாவட்ட செஸ் 212 சிறுவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 14, 2024 02:36 AM

சென்னை, செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், 212 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கர குளோபல் அகாடமியில் நேற்று துவங்கியது. போட்டிகள், 9 - 15 வயதினருக்கு நடக்கின்றன.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 212 சிறுவர் - சிறுமியர் ஆர்முடன் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் மொத்தம் ஏழு சுற்றுகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கின்றன. நாளை மாலை வரை தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் தேர்வு செய்யப்படுவோர், மாநில போட்டியில் செங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்பர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

