sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

154 ஆவின் முகவர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்று

/

154 ஆவின் முகவர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்று

154 ஆவின் முகவர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்று

154 ஆவின் முகவர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்று


ADDED : செப் 16, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் சார்பில், முகவர்களுக்கு பயிற்சி மற்றும் சான்றிதழ் பதிவு முகாம், ஆர்.எஸ்.புரம் ஆவின் அலுவலகத்தில் நடந்தது.

உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, பயிற்சியை துவக்கி பேசியதாவது:

பால் முகவர்களில், 500 லிட்டருக்கு குறைவாக விற்பவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு, அதற்கு மேல் விற்பவர்கள் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலையில் வினியோகித்த பின், மீதமுள்ள பாலை விதிமுறைப்படி, பாதுகாப்பாக வைத்திருந்து, மாலையில் வினியோகிக்க வேண்டும்.

கடை வைத்திருப்பவர்கள் சுகாதாரமாகவும், அனைத்து உணவு பாதுகாப்பு தர விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் வைத்திருக்கும் பலர், 500 லிட்டருக்கு மேல் வியாபாரம் மேம்படும்போது, அதை சமர்ப்பித்து விட்டு, உரிமம் பெற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்வில், 154 முகவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் பெற்றனர். உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆவின் மேலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us