sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அழிவின் விளிம்பில் கழுதைப்புலி

/

அழிவின் விளிம்பில் கழுதைப்புலி

அழிவின் விளிம்பில் கழுதைப்புலி

அழிவின் விளிம்பில் கழுதைப்புலி


ADDED : ஜன 14, 2024 07:20 AM

Google News

ADDED : ஜன 14, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : 'முதுமலை மசினகுடி வனப்பகுதிகளில், அழிவின் விளிம்பில் உள்ள கழுதைப்புலியை பாதுகாக்க சிறப்பு திட்டம் கொண்டு வரவேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டின் அழிவின் பட்டியல் உள்ள சில விலங்குகளில் கழுதைபுலியும் உள்ளது. 'ஹைனா' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கழுதைப்புலி மாமிச உண்ணி ஆகும். இதன் கூர்மையான விழிகள், கோரைப்பற்கள், கருப்பு புள்ளிகள் கொண்ட தோல் காண்போரை அச்சப்பட வைக்கும்.

நம் மாநிலத்தில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி, சீகூர், தெங்குமரஹடா, சத்தியமங்கலம் அதனை ஒட்டிய, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களின் ஒரு சில வனப்பகுதிகளில் காணப்படுகிறது.

மசினகுடி வனப்பகுதிகளை வாழ்விடமாக கொண்டிருந்தாலும், இவை பகல் நேரங்களில் தென்படுவது அரிதாக உள்ளது. பெரும்பாலும் இரவில் மட்டுமே வெளியில் உலா வரும்.

இதுவரை கழுதை புலிகள் எண்ணிக்கை குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. மிகவும் குறைவாக உள்ள, இவைகளின் எண்ணிக்கை குறித்து சிறப்பு கணக்கெடுத்து நடத்தி, பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டியது அவசியம்.

வனத்துறையினர் கூறுகையில், 'கழுதை புலிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசிடம் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கணக்கெடுப்பு பணிகள் துங்கப்படும். வன ஊழியர்கள் சிலர் அதனை நேரடியாக பார்த்துள்ளனர். இதை எச்சங்களை சேகரித்து வருகிறோம். தானியங்கி கேமராக்கள் மூலம் பதிவான பகுதிகளில் அதன் வாழ்விடங்களை கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us