sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறிக்கோள் எட்ட 'ஸ்மார்ட்'டா இருங்க!

/

குறிக்கோள் எட்ட 'ஸ்மார்ட்'டா இருங்க!

குறிக்கோள் எட்ட 'ஸ்மார்ட்'டா இருங்க!

குறிக்கோள் எட்ட 'ஸ்மார்ட்'டா இருங்க!


ADDED : செப் 25, 2025 12:36 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ லக்குகள் இன்றி மாணவர்கள் பயணிக்கக்கூடாது. இலக்கு அமைத்தல் என்பது ஒரு தனிநபரை அல்லது குழுவை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி உந்துவிக்கும்; வழிநடத்தும் திட்டத்தை உருவாக்கும் செயல்முறை. இது ஒரு குறிப்பிட்ட எதிர்கால நிலையை நிறுவி, அதை அடைவதற்காக சிந்தனை, உணர்ச்சி மற்றும் நடத்தைகளை ஒருங்கிணைக்கிறது.

மாணவர்கள் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெறுவது, ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்வது, அல்லது ஒரு குறிப்பிட்ட தேர்வுக்குத் தயாராவது.

ஆங்கிலத்தில் இதை 'ஸ்மார்ட்' முறை என்று குறிப்பிடுவார்கள்.

S -Specific (குறிப்பிட்ட): உங்கள் இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.

M - Measurable (அளவிடக்கூடிய): இலக்கை அடைந்தீர்களா என்பதைக் கண்டறிய வழி இருக்க வேண்டும்.

A - Achievable (அடையக்கூடிய): உங்கள் திறன்களுக்கு ஏற்ப இலக்கை அமைக்கவும்.

R - Relevant (தொடர்புடைய): இந்த இலக்கு உங்கள் நீண்டகால லட்சியங்களுடன் இணைந்ததாக இருக்க வேண்டும்.

T - Time-bound (கால வரையறைக்குட்பட்ட): இலக்கை அடைய ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும்.

இலக்குகளை எழுதிவைக்க வேண்டும்; அப்போது, அது உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும்.

இலக்கை அடைய என்னென்ன படிகளை எடுக்க வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம்.

இலக்குகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தேவைப்பட்டால் சரிசெய்யவும்.

இலக்குகள் மாணவர்களு க்கு ஒரு திசையையும், உந்துதலையும் வழங்குகின்றன. இலக்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட இது உதவுகிறது. இலக்குகளை அடைவது மாணவர்களுக்கு வெற்றியின் உணர்வையும், தன்னம்பிக்கையையும் வழங்குகிறது. இது மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.

வெற்றிக்கு என்ன வழி? ''நமது இலக்குகளை ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும், அதில் நாம் தீவிரமாக நம்பிக்கை வைத்து, அதன் அடிப்படையில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். வெற்றிக்கு வேறு எந்த வழியும் இல்லை'' என்கிறார் பாப்லோ பிக்காசோ. வாழ்க்கையை நிர்ணயிக்கும் மாணவ பருவத்தில் ஒழுக்கம், தகுதி, முயற்சி மற்றும் கட்டுப்பாடு அவசியம்.

படிப்புடன் நேர்மையான குறிக்கோளை நிர்ணயித்து, தேசப்பற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி உலகில் வேலைவாய்ப்புக்களை பெற தேவையான கூடுதல் தகுதிகளை மாணவர் வளர்த்துக்கொள்ள வே ண்டும். கற்றல் மூலம் அறிவை வளர்த்து வாழ்க்கையில் மேம்பட வைப்பது தான் கல்வி. ஒழுக்கம், தன்னம்பிக்கை வளர்க்கும் கல்வியை முழுமையாக மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையின் குறிக்கோளை திறம் பட புரிந்துகொள்வதற்கு உதவும்.






      Dinamalar
      Follow us