/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை வலுதூக்கும் போட்டி:பலம் காட்டிய மாணவர்கள்
/
பல்கலை வலுதூக்கும் போட்டி:பலம் காட்டிய மாணவர்கள்
ADDED : பிப் 01, 2024 11:16 PM
கோவை;பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான வலுதுாக்கும் போட்டியில் மாணவர்கள் தங்களின் பலத்தை காட்டினர்.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்குதல் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் நேற்று நடந்தது.போட்டியை தமிழக வலுதுாக்குதல் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர்நாகராஜ் துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 59,66,74,83,93, 105, 120, 120+ என பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் பாரதியார் பல்கலை அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

