/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடைகளை 'தாண்டிய' குதிரையேற்ற வீரர்கள்!
/
தடைகளை 'தாண்டிய' குதிரையேற்ற வீரர்கள்!
ADDED : ஜூலை 04, 2025 11:02 PM

இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி (தமிழ்நாடு) சார்பில், 'இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' குதிரையேற்ற போட்டி, நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.
வெள்ளானைப்பட்டியை அடுத்த மூலப்பாளையத்தில், 'பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் கிரஸ்ட்' மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், ஆறு மாநில அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வீரர்கள் என, 36 பேர் அசத்தி வருகின்றனர்.
சென்னை புல்ஸ் (தமிழ்நாடு), பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), கோல்கொண்டா சார்ஜர்ஸ் (தெலுங்கானா), குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா), எலீட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்கம்) ஆகிய அணிகளில் திறமையான குதிரையேற்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
போட்டியின் முன்னோட்டமாக, பார்வையாளர்கள் முன்பு குதிரையேற்ற வீரர்கள் சாகசங்கள் செய்து காட்டி, கரகோஷங்களை அள்ளினர். இன்றும், நாளையும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
துவக்க நிகழ்ச்சியில், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி மாநில தலைவர் சக்தி பாலாஜி, எக்ஸ்போ வான் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.