/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி
/
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி
உணவு பதப்படுத்தும் தொழில்; மகளிருக்கு இலவச பயிற்சி
ADDED : செப் 26, 2025 05:44 AM
கோவை; இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை சார்பில், வளர்ந்து வரும் உணவு பதப்படுத்தும் தொழில் குறித்து மகளிருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியம், பாரம்பரிய அரிசி, பழங்கள், காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், மசாலா பொடிகள், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தும் செய்முறை பயிற்சியாக வல்லுனர்களால் அளிக்கப்படும்.
அக். 27ல் துவங்குகிறது. 26 நாட்கள் காலை முதல் மாலை வரை நடைபெறும் இப்பயிற்சியில், 18 முதல் 45 வயதுடைய மகளிர் பங்கேற்கலாம்.
பயிற்சி முடிப்போருக்கு தொழில் மேற்கொள்ள வங்கி கடன், மானியம் பெற வழிகாட்டுதல் வழங்குவதுடன், அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
வடவள்ளியில் உள்ள ராமசாமி சின்னம்மாள் அறக் கட்டளையில் பயிற்சி நடைபெறும்.
விபரங்களுக்கு 99447 99995/ 88258 12528.