sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது

/

போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது

போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது

போர்வெல் மோட்டர் திருடிய நால்வர் கைது


ADDED : செப் 26, 2025 05:30 AM

Google News

ADDED : செப் 26, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; தீனம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் மணியன், 56. இவர், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், போர்வெல் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலைகளை, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் மோட்டார் பழுதானதால் அதனை அகற்றி, உலியம்பாளையம், ஜெயா நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, சில மர்மநபர்கள் பழுதான போர்வெல் மோட்டாரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மணியன், தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டது பி.என்.புதூரை சேர்ந்த ராஜதுரை,22, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண் ஜோதிவேல், 22, நரசிம்மா, 19 ஆகிய மூவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில், திருடிய போர்வெல் மோட்டார்களை, வடவள்ளியில் உள்ள ரத்ன பாண்டி, 44 என்பவரின் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. திருட்டு பொருட்களை வாங்கியதால், ரத்னபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai