sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்

/

வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்

வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்

வரும் ஜூனில் குரூப் 4 தேர்வு பயிற்சி வகுப்பு 12ல் துவக்கம்


ADDED : பிப் 06, 2024 01:29 AM

Google News

ADDED : பிப் 06, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் உள்ளிட்ட, 6,244 காலி பணியிடங்களுக்கு, குரூப் 4 தேர்வு, ஜூன் 9ல் நடைபெற உள்ளது. இதற்கு, https://www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரி வாயிலாக, வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

இத்தேர்வு எழுதுவதற்கு உதவியாக இருக்க, இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 12ம் தேதி துவக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள அனைவரும் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில், பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி அட்டவணை, வாரத்தேர்வு, முழு மாதிரித்தேர்வு நடத்தப்படும். https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து, பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன், கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்துக்கு வரும், 12ல் நேரில் வர வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us