sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., போலீசில் சயான் ஆஜர்

/

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., போலீசில் சயான் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., போலீசில் சயான் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சி.பி.சி.ஐ.டி., போலீசில் சயான் ஆஜர்


ADDED : பிப் 02, 2024 12:59 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு சயான் ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த, 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார்.

அதை தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக, 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவலின் படி பலருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானை கடந்த ஜன., மாதம், 11ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் சயான் விசாரணைக்காக ஆஜராகவில்லை. கேரளா கோர்ட்டில் வழக்கு விசாரணை இருப்பதால் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதாக சயான் தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று (1ம் தேதி) ஆஜராகும் படி மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சயான் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் மதியம் 2:00 மணிக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us