/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளையம்மன் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
/
வெள்ளையம்மன் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 18, 2024 11:50 PM
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் உள்ள வெள்ளையம்மன் கோவிலில் வரும் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் ஊராட்சியில் உள்ள வெள்ளையம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று (19ம் தேதி) மங்கள இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹுதி நடக்கிறது.
நாளை, 20ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, விமான கலசம் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்; மாலை, 6:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, நவ சக்தி அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 21ம் தேதி, காலை, 7:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடக்கிறது. காலை, 10:15 மணிக்கு, வெள்ளையம்மன் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், வெள்ளையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது.

