/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை
/
வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை
ADDED : பிப் 02, 2024 12:26 AM
நெகமம்;நெகமம், செட்டியக்காபாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி, தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம், செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 44, தேங்காய் வியாபாரி. இவர் நெகமம் சுற்றுவட்டார பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இதில், கடந்த சில தினங்களாக இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, மனமுடைந்த இவர் நெகமம் சவுத் இந்தியன் பேங்க் அருகே, தென்னைக்கு வைக்கும் மாத்திரையை சாப்பிட்டு தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த ராமசாமி, சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

