/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய இளைஞர் தின விழா: கல்லூரியில் கொண்டாட்டம்
/
தேசிய இளைஞர் தின விழா: கல்லூரியில் கொண்டாட்டம்
ADDED : ஜன 22, 2024 08:48 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், விவேகானந்தரின், 161வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி துறை தலைவர் தியாகு தலைமை வகித்து பேசுகையில், 'விவேகானந்தர், இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திழ்ந்தவர். எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் சக்தி இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் மற்றும் போதனைகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.
இரண்டாமாண்டு மாணவர்கள் விவேகானந்தரின் போதனைகளை, மாணவர்கள் எப்படி எடுத்துக்கொள்வது மற்றும் இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதை சாதனையாக்குவது குறித்தும் விளக்கினர்.

