/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது
/
ஐந்து கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது
ADDED : ஜூன் 24, 2025 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புலு சுனா, 31. இவர் கடந்த சில ஆண்டுகளாக சூலுார், பாரதிபுரத்தில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
கோவில்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., இளவேந்தன் தலைமையிலான போலீசார், கோவில்பாளையம் அருகே நேற்று சோதனை நடத்திய போது ஐந்து கிலோ கஞ்சாவுடன் புலு சுனா பிடிபட்டார்.
போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.