sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்

/

கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்

கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்

கிழி கிழின்னு ஜனங்க கிழிக்கிறாங்க! ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் புலம்பல்


ADDED : ஜூன் 29, 2025 03:22 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சியில், மாமன்ற கூட்டம் நடந்தது.

இதில், கல்வி குழு தலைவர் மாலதி கூறுகையில், ''எனது வார்டில் வீதி ரோடுகள் மோசமாக இருக்கின்றன. துாய்மை பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நிரந்தர பணியாளர்களை வார்டுக்கு பிரித்து தருவதாக கூறினீர்கள். ஏன் பிரித்துக் கொடுக்கவில்லை. வார்டு 'வாட்ஸ்அப்' குழுக்களில் கிழி கிழியென கிழிக்கின்றனர். கவுன்சிலர் எங்கே என மக்கள் கேட்கிறார்கள்,'' என்றார்.

பணிகள் குழு தலைவர் சாந்தி பேசுகையில், ''நிலைக்குழு கூட்டங்களுக்கு பொறியியல் பிரிவு அதிகாரிகள் வருவதில்லை. ஆனால், கமிஷனர் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டும் வருகின்றனர். கமிஷனர் கூறினால் மட்டுமே அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நகர பொறியாளரை, மொபைல் போனில் அழைத்தால், பேசுவதில்லை,'' என குற்றஞ்சாட்டினார்

வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா பேசும்போது, ''12 தீர்மானங்கள் வரி விதிப்பு குழு கூட்டத்துக்கு அனுப்பாமல், மன்றத்துக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது,'' என்றார்.

இதையடுத்து, நிலைக்குழு கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்க, கமிஷனர் அறிவுறுத்தினார்.

இ.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் சாந்தி பேசும்போது, ''தெருவிளக்குகள் எரிவதில்லை. 'ரானா' நிறுவனத்திடம் தெரிவித்தாலும் சரி செய்வதில்லை. அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர்,'' என்றார்.

ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா பேசுகையில், ''பாதாள சாக்கடை இணைப்புக்கு வரி புத்தகம் கொடுக்கக் கூடாது. அத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். வார்டுக்குள் குழிகள் அதிகமாக இருக்கின்றன. 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்,'' என்றார்.

'பொதுமக்கள் கண்காணிக்கிறார்கள்'


ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''குறிச்சி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ஒப்பந்த நிறுவனத்தினரிடம் எந்த பொருளும் இருப்பதில்லை. பாலங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. தண்ணீர், ரோடு, தெருவிளக்கு வசதி முக்கியம். சூயஸ் நிறுவனத்தினர் கட்டுப்பாடின்றி செயல்படுகின்றனர். அவர்களை மாநகராட்சி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். நம்மை பொதுமக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்,'' என்றார்.

'தேர்தல் முடியும் வரை...'

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி கூறும்போது, ''குப்பை, தண்ணீர் பிரச்னை தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். விதிமீறல் கட்டடங்களுக்கான கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிந்தோம். தேர்தல் முடியும் வரை எந்த கட்டணத்தையும் உயர்த்தாதீர்கள். தேர்தலுக்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.'' என்றார்.








      Dinamalar
      Follow us