sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாந்தி வனம் மீண்டும் செயல்பட துவங்கியது

/

சாந்தி வனம் மீண்டும் செயல்பட துவங்கியது

சாந்தி வனம் மீண்டும் செயல்பட துவங்கியது

சாந்தி வனம் மீண்டும் செயல்பட துவங்கியது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், கோவிந்தம்பிள்ளை மயானத்தில், நகராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எரிவாயு தகனக்கூடம் (கிரிமிட்டோரியம்) உள்ளது.

இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர், நிர்வாகம் செய்து வருகின்றனர். எரிவாயு தகன கூடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், இதை சீரமைக்க நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த மாதம் 20ம் தேதியிலிருந்து, சாந்தி வனத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கியதால் மூடப்பட்டது. எரிவாயு தகன கூடத்தில் அடுப்பு, மின் மோட்டார்கள், உடலை தாங்கிச் செல்லும் டிராலி ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர். சாந்தி வனத்தில் நேற்று முன்தினம் மதியம் சிறப்பு பூஜை செய்த நிர்வாகத்தினர், மீண்டும் எரிவாயு தகனக் கூடத்தை இயக்கினர்.

வழக்கம் போல் சாந்தி வனம் இயங்கும் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar