sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கடன் பிரச்னையால் தற்கொலை நாடகம்; குஜராத் வாலிபரின் பலே திட்டம் அம்பலம்

/

கடன் பிரச்னையால் தற்கொலை நாடகம்; குஜராத் வாலிபரின் பலே திட்டம் அம்பலம்

கடன் பிரச்னையால் தற்கொலை நாடகம்; குஜராத் வாலிபரின் பலே திட்டம் அம்பலம்

கடன் பிரச்னையால் தற்கொலை நாடகம்; குஜராத் வாலிபரின் பலே திட்டம் அம்பலம்


ADDED : அக் 21, 2025 12:03 AM

Google News

ADDED : அக் 21, 2025 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: பாலக்காடு அருகே தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி தலைமறைவானவரை போலீசார் கண்டுபிடித்தனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹுனானி சிராஜ் அஹமது பாய், 39. இவர், குஜராத்தில் பல பேரிடம் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, கேரளாவில் 'ரப்பர் பேண்ட்' பிசினஸ் செய்து வந்தார்.

பாலக்காடு மாவட்டம், சொரனூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவாறு, வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த செப். மாதம் 17ம் தேதி, இவர் சொர்னூர் அருகே உள்ள பாரதப்புழை ஆற்றின் பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுத்து குஜராத்தில் உள்ள மனைவிக்கு அனுப்பி, தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதன்பின், அவரது மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனது.

தகவல் அறிந்து குஜராத்தில் இருந்து வந்த மனைவியும், உறவினர்களும், சொர்னூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் சிறப்பு படை அமைத்து விசார ணை நடத்தினர்.

இதற்கிடையே, அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும், தற்கொலை நாடகமாடி நம்ப வைத்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

அதன்பின், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் நடத்திய விசாரணையில், தினமும் இரவு நேரத்தில் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவரின் பெயரில் உள்ள 'சிம்கார்டு' பயன்படுத்தி பெங்களூருவில் இருந்து ஹுனானி சிராஜ் அஹமது பாய், மனைவியை தொடர்புகொள்வது தெரியவந்தது.

இதையடுத்து, பெங்களூரு சென்று நடத்திய விசாரணையில், டிரைவராக பணி புரியும் ஹுனான் சிராஜ் அஹமது பாயை, மெஜஸ்டிக் என்ற இடத்தில் கண்டுபிடித்தனர்.

கடன் தந்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், மனைவியின் உதவியுடன் தற்கொலை நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். அவரை பாலக்காடு அழைத்து வந்து, தொடர் விசாரணை நடத்திய பின், உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பாலக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us