sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு கலந்தாய்வு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 03, 2025 09:08 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 09:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், தொடக்க கல்வித்துறையில், முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறையில், 2025 - 26ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை.

உபரி ஆசிரியர்கள், மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு பதவி உயர்வுடன் கூடிய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். அதுவரை கலந்தாய்வை நடத்தக்கூடாது. பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின் படி, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை செயலாளர் பாபு வரவேற்றார். அமைப்பின் மாவட்டத் தலைவர் ரங்கநாதமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் தங்கபாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us