sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

/

மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மருதமலை கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 24, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதியுலா நடந்து வருகிறது.

இந்நிலையில், தைப்பூச தேர்த்திருவிழாவின் ஆறாம் நாளான இன்று, காலை, யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடக்கிறது, தொடர்ந்து, காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

நாளை, தைப்பூசத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இதனையொட்டி, இன்று மாலை முதலே, ஏராளமான பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், படிக்கட்டு பாதை வழியாக இன்று இரவு முழுவதும் நடந்து செல்வார்கள் என்பதால், பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us