/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடற்தகுதி தேர்வுக்கு முன்பதிவு செய்யலாம்
/
உடற்தகுதி தேர்வுக்கு முன்பதிவு செய்யலாம்
ADDED : ஜன 23, 2024 01:41 AM
கோவை;தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு, கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச உடற்தகுதி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப படிவத்துடன் இலவச உடற்தகுதி தேர்வில் பங்கேற்று தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பங்கேற்க விரும்புவோர், 0422 - 2642 388, 93615 76081 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

