/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தர்ணா
/
கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தர்ணா
ADDED : ஜன 23, 2024 04:34 AM

கடலுார், : சிதம்பரம் அருகே நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் பரமேஸ்வரநல்லுாரை சேர்ந்தவர் சீனுவாசன், 46; கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான இடத்தை சிதம்பரம் பைபாஸ் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் கையகப்படுத்தினர்.
அதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக இருந்ததால், வாங்க மறுத்தார். அதிகாரிகள் நீதிமன்றத்தில் பணத்தை செலுத்திவிட்டு பணியை துவக்கினர்.
இந்நிலையில், இந்த தொகை போதுமானதாக இல்லை என கூறி சீனுவாசன் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் இரு முறை தர்ணா போராட்டம் நடத்தினார். நடவடிக்கை இல்லாததால், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட சீனுவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

