sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  

/

திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  

திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  

திருக்குறள் பற்றாளருக்கு தமிழ்ச்சங்கம் பாராட்டு  


UPDATED : ஜூன் 26, 2025 07:10 AM

ADDED : ஜூன் 26, 2025 01:31 AM

Google News

UPDATED : ஜூன் 26, 2025 07:10 AM ADDED : ஜூன் 26, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பாரதி சாலையில் உள்ள பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலி தனது தந்தை ரகீம் நினைவாக கடந்த மே 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை நடத்தினார். இதில் எல்.கே.ஜி.,முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து பரிசு பெற்றனர். ஒரு திருக்குறள் கூறினாலும், ஊக்கப்படுத்தும் விதமாக பரிசளிக்கப்பட்டது. மேலும், 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவருக்கு தங்க காசு பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலியின் திருக்குறள் பற்றினை பாராட்டி, ஐந்தாம் உலக தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமரன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மற்றும் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் நிஷ்டர் அலிக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் மேலாளர் அன்சாரி மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us