ADDED : ஜன 23, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு ஆனந்தா ஜூவல்லரியில் 54ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முதல், நாளை (24ம் தேதி) வரை சிறப்பு சலுகை விற்பனை நடக்கிறது.
இதுகுறித்து ஜூவல்லரி உரிமையாளர்கள் ராஜி, மாதவன், மோகன் ஆகியோர் கூறுகையில், பொன் விழா நிறுவனமான ஆனந்தா ஜூவல்லரியில் 54ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ்.916 ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய அனைத்து நகைகளுக்கும் செய்கூலி இல்லை. 6 சதவீதம் மட்டுமே சேதாரம்.
அனைத்து வெள்ளி பாத்திரம் மற்றும் கொலுசுகளுக்கு கூலி, சேதாரம் இல்லாமல் வழங்கப்படும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தரக்கூடிய உண்மையான சலுகையை பெற அழைக்கிறோம்' என்றனர்.

