sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் அதிரடி கைது

/

நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் அதிரடி கைது

நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் அதிரடி கைது

நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபர் அதிரடி கைது


ADDED : ஜன 14, 2024 06:21 AM

Google News

ADDED : ஜன 14, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : அஞ்சல் நிலைய கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக, நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த பண்ருட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் சையது கலீல் மகன் கமல்பாபு,22; இவரது, அஞ்சல் சேமிப்பு கணக்கை 3.7.2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடக்கி வைத்தனர்.

அந்த கணக்கை மீண்டும் பயன்படுத்துவதற்காக, கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதாக, அஞ்சலக கண்காணிப்பாளருக்கு 3.1.2024ல் தபால் வந்தது. அந்த கடிதத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்தபோது, போலி என்பது தெரிய வந்தது.

அதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அலுவலக சிரஸ்தார் முரளிதரன் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிந்து விசாரணை செய்தார்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், பண்ருட்டியை சேர்ந்த கமல்பாபுவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

அதில், முடக்கப்பட்ட அவரது அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக, ஆன்லைன் மூலம் கோர்ட் உத்தரவை எடுத்து அதுபோலவே தனது வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மூலமாக போலி உத்தரவை தயார் செய்து அதில், 'ஸ்டாம்ப் மேக்கர்' என்ற இணையதளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் பெற்று, போலி உத்தரவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் அஞ்சலக கண்காணிப்பாளருக்கும் விழுப்புரத்தில் இருந்து பதிவு தபாலில் அனுப்பியது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, கமல்பாபுவை கைது செய்த போலீசார், போலி ஆவணம் தயாரிக்க பயன்படுத்தி கம்ப்யூட்டர், சி.பி.யூ., போலி முத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கமல்பாபுவை நேற்று, கடலுார் மாஜிஸ்திரேட் , கோர்ட் 2ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us