நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், வடக்குத்திட்டை வாசுதேவ பெருமாள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
பா.ஜ.. மாவட்ட செயலாளர் திருமாவளவன், உழவாரப்பணியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் நாராயணன் சதீஷ்குமார், அன்பரசு, சண்முகம், மணிகண்டன், தங்கமணி, பாரி, ஜனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டதுடன், மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஞானசபாபதி நன்றி கூறினார்.

