sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிகள் திருமணம் 8 பேர் மீது வழக்கு  

/

சிறுமிகள் திருமணம் 8 பேர் மீது வழக்கு  

சிறுமிகள் திருமணம் 8 பேர் மீது வழக்கு  

சிறுமிகள் திருமணம் 8 பேர் மீது வழக்கு  


ADDED : ஜூன் 25, 2025 08:31 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே இரு இடங்களில் நடந்த சிறுமி திருமணம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 8ம் தேதி அவருக்கு பெற்றோர் திருமணம் செய்தனர். இதுகுறித்து சிறுமி சைல்டு ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கடலுார் மகளிர் ஊர்நல அலுவலர் தெய்வானை நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தரணி, அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

இதேப் போன்று, கடலுார் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 15ம் தேதி திருமணம் நடந்தது. இதுகுறித்து கடலுார் அனைத்து மகளிர் போலீசார், புருகீஸ்பேட்டையைச் சேர்ந்த அமர்நாத், சிறுமியின் பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us