sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

/

கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

கடலோர பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு


ADDED : ஜூன் 26, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்ட கடலோர பாதுகாப்பு படை சார்பில் , கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை கூட்டு பயிற்சி நேற்று நடந்தது.

ரெட் போர்ஸ்' குழுவைச் சேர்ந்த போலீசார் சாதாரண உடையில் தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். இவர்களை ஊருக்குள் நுழையாமல் தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடலுாரில் நேற்று சாகர் கவாஜ் ஒத்திகை நடத்தப்பட்டது.

காலை 8.15மணிக்கு, கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில் போலீசார் தேவனாம்பட்டினம் அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இரண்டு படகுகளில் வந்த ஐந்து நபர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் வந்த போலீசார் என, தெரிந்தது. கடலுாரில் நடந்த சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்த சம்பவத்தால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai