ADDED : ஜன 23, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள்வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை களைய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், மத்திய, மாநில, அரசுகளின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடந்து வரும் ஊழல் முறைகேடுகளை களைய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை. விவசாய சங்கத் தலைவர் சிவக்குமார். நகர செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

