ADDED : மே 27, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அருகே கார் மோதிய விபத்தில், முதியவர் இறந்தார்.
சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால், 70; இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த கார், கோபால் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

