/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
படகு கவிழ்ந்து மீனவர் சாவு: கிள்ளை அருகே போராட்டம்
/
படகு கவிழ்ந்து மீனவர் சாவு: கிள்ளை அருகே போராட்டம்
படகு கவிழ்ந்து மீனவர் சாவு: கிள்ளை அருகே போராட்டம்
படகு கவிழ்ந்து மீனவர் சாவு: கிள்ளை அருகே போராட்டம்
ADDED : ஜன 21, 2024 04:51 AM

கிள்ளை: கிள்ளை அருகே வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து உயரிழந்த மீனவர் உடலை எடுக்க விடாமல், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிள்ளை சின்னவாய்க்கால் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீனவசெல் வம், 45; தயாளமூர்த்தி, 50; இருவரும் நேற்று முன் தினம் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை கரை திரும்பினர். வெள்ளாற்று முகத்துவாரத்தில் வந்தபோது, முகத்துவாரம் துார்ந்திருந்ததால், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இந்நிலையில் நேற்று காலை சின்னவாய்க்கால் கடற்கரையோரம் மீனவசெல்வத்தின் உடல் கரை ஒதுங்கியது. தயாளமூர்த்தியை காணவில்லை.
தகவலறிந்த, சின்னவாய்க்கால் கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, பிரேத பரிசோதனைக்காக மீனவசெல்வத்தின் உடலை எடுக்க விடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிள்ளை போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், மீனவசெல்வத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

