/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கடலுாரில் பரபரப்பு
/
டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கடலுாரில் பரபரப்பு
டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கடலுாரில் பரபரப்பு
டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கடலுாரில் பரபரப்பு
ADDED : ஜன 21, 2024 04:09 AM

கடலுார்: கடலுாரில் டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை கன்னிக்கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்,55; சிதம்பரம் எலைட் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது முதல் மகன் சிலம்பரசன் சென்னை பட்டாலியனில் போலீசாக உள்ளார். இரண்டாவது மகன் தனுஷ் கல்லுாரியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மோகன், அவரது மனைவி இருவரும் வீட்டிலும், தனுஷ் அதே தெருவில் உள்ள உறவினர் வீட்டிலும் துாங்கினர்.
நேற்று அதிகாலை மோகன் வீட்டின் முன்பு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அச்சமடைந்த எதிர் வீட்டுக்காரர் வெளியில் வந்து பார்த்தபோது மோகன் வீட்டின் கிரிலில் இருந்த திரைசீலை எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன், தனுசுக்கு போன் செய்து வரவழைத்து தீயை அணைத்தார். அதன்பிறகே மோகன் வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்தார்.
தகவலறிந்த எஸ்.பி., ராஜாராம், கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில், பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.
இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, மோகன் வீட்டில் யார், எதற்காக பெட்ரோல் குண்டு வீசினர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

