/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது
/
மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது
ADDED : மார் 28, 2025 06:40 AM
திட்டக்குடி : நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை பிளேடால் கிழித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த நெய்வாசலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; மனைவி கலைவாணி, 30; திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராமகிருஷ்ணன் தனது மனைவி கலைவாணி நடத்தையில் சந்தேகப்பட்டு, கடந்த 12ம் தேதி அவரை திட்டி, பிளேடால் கிழித்துள்ளார்.
இதையறிந்த அவரது உறவினர்கள் கலைவாணியை மீட்டு விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்து, தாய் மீனாம்பாளை தேடி வருகின்றனர்.