sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

/

வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வடலுார் சத்தியஞான சபையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜன 24, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 24, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : வடலுாரில் சத்தியஞான சபையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சமைக்கப்படும் உணவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வடலுார் சத்தியஞான சபையில் நாளை 25ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி கைலாஷ் குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் சத்தியஞான சபையில் தயார் செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்தனர்.

சுகாதார முறை, இருப்பு வைத்திருக்கும் முறை, பக்தர்களுக்கு சமைத்து வழங்கப்படும் அன்னதான மண்டபங்களை ஆய்வு செய்தனர்.

அன்னதானம் வழங்குபவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது, சூடான நிலையில் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும், பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டுமென, ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us