sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளியில் காலை உணவில் பல்லி 17 மாணவர்கள் 'அட்மிட்'

/

பள்ளியில் காலை உணவில் பல்லி 17 மாணவர்கள் 'அட்மிட்'

பள்ளியில் காலை உணவில் பல்லி 17 மாணவர்கள் 'அட்மிட்'

பள்ளியில் காலை உணவில் பல்லி 17 மாணவர்கள் 'அட்மிட்'


ADDED : செப் 25, 2025 11:52 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: கடலுார் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், ஆதிவராகநத்தத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 108 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இங்கு நேற்று காலை உணவாக சேமியா கிச்சடி, சாம்பார் வழங்கப்பட்டது.

17 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில், சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் சில மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறியதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கனிமொழி தலைமையிலான மருத்துவ குழுவினர், பள்ளிக்கு வந்து மாணவர்களை பரிசோதித்தனர்.

பள்ளியில் திரண்ட பெற்றோர்கள், பிள்ளைகளை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர். வட்டார கல்வி அலுவலர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, 17 மாணவர்களை தலைமை ஆசிரியை ராதிகா மூலமாக 108 ஆம்புலன்சில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாணவர்கள் அங்கு சிகிச்சை பெற்று, திரும்பினர்.






      Dinamalar
      Follow us
      Arattai