sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்

/

கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்

கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்

கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 18, 2025 03:55 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அருகே வனப்பகுதி சாலையில் நள்ளிரவில் மர்ம பூஜை அருங்கேறுவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடலுார் - சின்னசேலம் கூட்டுரோடு வரை 111கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியே சிதம்பரம், விருத்தாசலம், ஆத்துார் , சேலம் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடலுார் துறைமுகத்திலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இதன் வழியாக செல்கின்றன.

இந்த சாலையில், வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் விவசாய நிலங்களும், காப்புகாடு இணையும் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் வாரத்திற்கு 3 முறை நள்ளிரவில் மர்ம நபர்கள் பூசணிக்காயை வெட்டி, மஞ்சள், குங்குமம் துாவி, துணிகளை வைத்து, சேவலை பலி கொடுத்து பூஜை செய்து வருகின்றனர்.

அதனை சாலையிலேயே போட்டுவிட்டு செல்வதால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள விளை நிலங்களுக்கு வந்து செல்லும் பெண்கள், இரவு நேரங்களில் காவலுக்கு வரும் விவசாயிகள் பீதியடைகின்றனர்.

கடலூர் - சேலம் சாலையில் இரவு ரோந்து போலீசார் இல்லாததால், மர்ம நபர்கள் சாலையில் பூஜை செய்வது, காப்புகாட்டிற்குள் சென்று வன விலங்குகளை வேட்டையாடுவது என தொடர்ந்து நடக்கிறது. எனவே, வேப்பூர் காப்புக்காடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடக்கும் மர்ம பூஜைகளை தடுக்கவும், காப்புகாட்டிற்குள் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், ரோந்து போலீசார் நியமித்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us