sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை

/

தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை

தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை

தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை


ADDED : மே 17, 2025 07:11 AM

Google News

ADDED : மே 17, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுா: கடலுாரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் பத்தாம் இடத்திற்கு முன்னேறியது. மொத்தமுள்ள 246 பள்ளிகளில் இருந்து 29 ஆயிரத்து 477 பேர் தேர்வு எழுதினர். அதில் 28 ஆயிரத்து 316 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அனைவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர், தேர்வறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளிகளில் கடந்த காலங்களில் அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், துரைபாண்டியன், ஞானசங்கர் அடங்கிய குழுவினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us