நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகையிலை இல்லா நல்வாழ்விற்கான உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் காளிராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் வீரப்பன், ராமமூர்த்தி, ஆர்த்தி, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகையிலை இல்லா பள்ளி வளாகம்; போதையில்லா தலைமுறையை உருவாக்குவோம்; குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.