நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில் பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாலை 4:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; மாலை 5:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், பெண்ணாடம் காமராஜர் வீதி, பாலதண்டாயுதபாணி ஆகிய கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

