/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி துணைத் தலைவி சேற்றில் இறங்கி போராட்டம்
/
ஊராட்சி துணைத் தலைவி சேற்றில் இறங்கி போராட்டம்
ADDED : ஜன 14, 2024 06:09 AM

கடலுார், : கடலுாரில் அடிப்படை வசதி நிறைவேற்றாததை கண்டித்து, ஊராட்சி துணைத் தலைவி சேற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் ஒன்றியத்தை சேர்ந்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில் சாலைகள் சேறும் சகதியுமாக மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது.
தெருவிளக்குகள் எரியாததால் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. ஊராட்சியில் நிதி இல்லாததால் திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுகுறித்து ஊராட்சியின் துணை தலைவரான சுபஸ்ரீ, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து துணை தலைவர் சுபஸ்ரீ நேற்று அதிரடியாக, சேறும், சகதியுமான சாலையில் மண்டியிட்டு, யாசகம் வேண்டி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த கடலுார் ஒன்றிய சேர்மன் பக்கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, வீரமணி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக சுபஸ்ரீயிடம் உறுதியளித்தனர்.
அதனையேற்று சுபஸ்ரீ தனது நுாதன போராட்டத்தை முடித்துக் கொண்டார். இந்த நுாதன போராட்டத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

