sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் பைசா செலவில்லாமல் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம்

/

சிதம்பரத்தில் பைசா செலவில்லாமல் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம்

சிதம்பரத்தில் பைசா செலவில்லாமல் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம்

சிதம்பரத்தில் பைசா செலவில்லாமல் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஜன 23, 2024 11:20 PM

Google News

ADDED : ஜன 23, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரத்தில் ஆங்கிலேயர் காலத்தில், 1867 முதல் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 1905 ம் ஆண்டு முதல் லால்கான் தெருவில் சொந்த கட்டடத்தில் பதிவுத்துறை அலுவலகள் செயல்பட்ட வந்தது.

சுமார் சுமார் 118 ஆண்டுகளாக செயல்பட்ட இந்த அலுவலக கட்டிடம் பழுதானதால், 5.5 கோடி நிதியில், புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் கடந்த வாரம் இடமாற்றத்திற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கினர். பழைய கட்டடத்தில் இருந்த ஆவணங்களை, சிதம்பரம் - புவனகிரி பைபாஸ் சாலையில், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ள இடத்திற்கு மாற்றும் பணிகள் தீவீரமாக நடந்தது.

இந்த இடம் மாற்ற சில லட்சங்கள் செலவானது. அதில் ஒரு பைசா கூட பதிவாளரோ, அலுவலக ஊழியர்களோ செலவு செய்யவில்லை. வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அரசு பணிக்காக செலவு செய்வதில் காட்டவில்லை என்பதுதான் வேதனை.

இதற்கான செலவுகளை, பதிவுத்துறை அலுவலகத்திற்காக பணியாற்றும் பத்திர எழுத்தர்கள், அதனை சார்ந்த பணியாளர்களுமே செய்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us