/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பவானி கூடுதுறையில் 2 யாசகர்கள் மர்மச்சாவு
/
பவானி கூடுதுறையில் 2 யாசகர்கள் மர்மச்சாவு
ADDED : செப் 23, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், கார் பார்க்கிங் பகுதியில், ஏராளமான யாசகர்கள் அமர்ந்து பிச்சை எடுப்பது வழக்கமாக உள்ளது
. மகாளய அமாவாசை தினமான நேற்று முன்தினம் மதியம் பிச்சை எடுத்து கொண்டிருந்த, 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு ஆண் யாசகர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அங்கு சென்ற பவானி போலீசார், அவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. யாசகர்களின் மர்மச்சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.