/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம், சீருடை
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம், சீருடை
ADDED : ஜன 08, 2025 02:57 AM
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம், சீருடை
தர்மபுரி,:தர்மபுரி அடுத்த, செட்டிகரை பஞ்., உட்பட்ட பள்ளகொல்லை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 100 மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து, மாணவர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், மாது, இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

