sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை

/

முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை

முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை

முகாம்கள் வாயிலாக 6662 பேருக்கு வேலை


ADDED : ஜன 10, 2024 06:45 AM

Google News

ADDED : ஜன 10, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 1144 தனியார் நிறுவனங்களில் 6662 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக'' செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது : படித்த இளைஞர்கள் அரசு , தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சித் துறை போன்ற துறைகளின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் , வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதோடு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன.

திண்டுக்கல், வேடசந்துார் , பழநியில் நடந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, பொறியியல் படித்த இளைஞர்கள் கல்வி தகுதிக்கேற்ப பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதில் முடிந்த 3 ஆண்டுகளில் நடந்த 19 முகாம்களில் 1744 பேர் , 211 தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றதில் 324 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தொழிலாளர் நலன் , திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில் நடந்த 6 முகாம்களில் 32,705 பேர், 933 தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றதில் 6338 பேர் வேலை பெற்றுள்ளனர். 1,66,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 1144 நிறுவனங்களில் 6662 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us