sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எங்கும் சுற்றி திரியும் நாய்கள் கூட்டத்தால் அச்சம்

/

எங்கும் சுற்றி திரியும் நாய்கள் கூட்டத்தால் அச்சம்

எங்கும் சுற்றி திரியும் நாய்கள் கூட்டத்தால் அச்சம்

எங்கும் சுற்றி திரியும் நாய்கள் கூட்டத்தால் அச்சம்


ADDED : ஜன 24, 2024 05:30 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியாத கோபுர விளக்கு

திண்டுக்கல்- திருச்சி ரோடு முள்ளிப்பாடி செட்டியபட்டிப் பிரிவில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பத்து நாட்களாக எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. விபத்துகள் நடக்கும் முன்பே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.................------கழிவுகளால் கொசுக்கள்

வடமதுரை ஆதம்ஸ் நகர் இரண்டாவது தெருவில் சாக்கடை பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுதேங்கி கொசு, விஷ பூச்சிகள் அதிகரிப்பால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் கழிவு தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும். - ஜெயபால், வடமதுரை.

................------குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஒட்டன்சத்திரம் கே.ஆர் .அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள திண்டுக்கல் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வெளியேறுகிறது .இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவச்சந்திரன் ஒட்டன்சத்திரம்.

............-------- நாய்களால் அச்சம்

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அஞ்சலி ரவுண்டானா அருகே சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் ,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே கூட்டமாக நாய்கள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஞ்சித், திண்டுக்கல்.

.....................--------

பெயர் பலகையால் அவதி

பழநி அடிவாரம் ரவுண்டானா அருகே பெயர் பலகை அழிந்து உள்ளதால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர் .பெயர் அழிந்துள்ள பலகையால் பெயர் தெரியாமல் வாகன ஓட்டிகள் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக் வேண்டும்.அன்னபூரணி, பழநி.

.............--------குப்பையால் சுகாதாரக் கேடு

திண்டுக்கல் நந்தவனப்பட்டி சர்வீஸ் ரோடு அருகே குவிந்துள்ள குப்பை பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவக்குமார். திண்டுக்கல்.

..............---------திறந்த வெளி சிறுநீர் கழிப்பால் தொற்று

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் மூக்கை பிடித்தப்படி செல்கின்றனர் .சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வேண்டும்.மணிவண்ணன், திண்டுக்கல்.

.............---------






      Dinamalar
      Follow us